பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பு விஸ்வாஸ் சார்பாக மாணவர்களுக்கான 15ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா 2017 கல்வி உதவிதொகை ,சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 15,2017அன்று பொள்ளாச்சி விஸ்வகர்மா மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது.
விழாவிற்கு விஸ்வாஸ் தலைவர் திரு தர்மபூபதி ஆறுமுகம் தலைமை வகித்தார்.திரு விவேகானந்தன் வரவேற்புரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக ரயில்வேபோர்டு பயணிகள் வாரிய உறுப்பினர் திரு ஆசீர்வாதம் அச்சாரியார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.பிரபல திரைப்பட பாடகரும் திரிச்சி ளொகனதன் அவர்களின் புதல்வருமான பாடகர் தீபன் சக்ரவர்த்தி,கலைமாமணி திரு ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மஹா விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.விழாவில் பிரபல தொலைக்காட்சி மேடை பட்டிமனற பேச்சாளர் மகேஸ்வரி சற்குரு மற்றும்,விஸ்வகர்மா கல்யாண மண்டப அறக்கட்டளை தலைவர் திரு கனகராஜ் அவர்கள் பரிசு பெற்றவர்களை வாழ்த்தி பேசினார் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்கட்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பொறியியற் பட்டப் படிப்பு, டிப்ளமா படிப்பு, கலைக்கல்லூரி பட்டப் படிப்பு மாணவ மாணவ மாணவியர்கட்கு விஸ்வகர்மா பெரியோர்கள் வழங்கிய உதவித் தொகைகள் மாணவ மாணவியர்கட்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை திரு விவேகானந்தன், திரு திருநாவுக்கரசு ஆகியோர் தொகுத்தளித்தனர் இணைச்செயலாளர் திரு மதுராந்தகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
விழாவில் நல்லதே விரும்பும் முருகானந்தன் எழுதிய புத்தகத்தை ஏர்வாடி ராதாகிருஷ்ணன அவர்கள் வெளியிட்டார்.ரோபோ திரு பாலாஜி அவர்களின் அறிய படைப்புகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழ்ங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை விஸ்வாஸ் மத்திய குழு நிர்வாகிகள் துணைத்தலைவர்கள் திரு ஜெயப்பிரகாஷ் திரு பாலசுப்ரமண்யம், திரு சுப்பாரத்தினம், செயலாளர்கள் திரு திருநாவுக்கரசு இணைசெயலாளர் திரு மதுராந்தகன் பொருளாளர் திரு மோகனசுந்தரம் ஒருங்கிணைப்பாளர் திரு பி பாலன் திட்டக் குழு உறுப்பினர்கள் திரு விவேகானந்தன், திரு சிவசுப்ரமண்யன் திரு பிரகாஷ் செயற்குழு உறுப்பினர்கள், திரு ராதாகிருஷ்ணன் திரு சசி வெங்கடாச்சலம், திரு ஸ்ரீதரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர் நிகழ்ச்சிகளைக் காண: விஸ்வாஸ் வித்யா 2017
NOBLE ACTION TO THE MOST NEEDY COMMUNITY AT THE MOST APPROPRIATE TIME. DESERVES APPRECIATION BY ALL.