நரஹரி சோனார்

பக்தர்களுக்குள்ளேயே தீவிரமான, வீர சைவர்,  வீர வைஷ்ணவர் என்று சிலரை நாம் இன்றும் பார்க்கிறோம் , அவர்கள் தாம் வழிபடும் தெய்வத்தைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வழிபட மாட்டார்கள். கண்ணாலும் பார்க்க மாட்டார்கள். அப்படி இருந்தாலும் பரவாயில்லையே. மற்றவர்கள் சொன்னாலோ எழுதினாலோ அதை ஆட்சேபிப்பது தான் அதிக பட்சம்!
இந்த கதையில் வரும் நரஹரி அப்படிப்பட்ட ஒரு வீர சைவர்தங்க நகைகள் செய்யும் விஸ்வகர்மா பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். நகை செய்வதில் அவருக்கு இணை அவரே தான். சிவனைத் தவிர வேறுதெய்வமில்லை என்ற அளவுக்குச் சிவனை மட்டுமே வழிபடும் வீர சைவ மரபில் வந்தவர். ஆனால், வாழ்வதோ பண்டரிபுரம். அங்கே கோயில் கொண்டிருப்பவன் விட்டலன். எனவே, விட்டலனுக்கு விசேஷமான நாள்களில்பக்தர்கள் கோஷமிடும் `விட்டல’ நாமத்தைக் கேட்க மறுத்து அவர் வெளியூர் போய் விடுவார் என்றால் அவர் எப்படிப்பட்ட சைவனாக இப்ருப்பார் பாருங்கள்! அப்படியே இருக்க நேர்ந்தாலும் காதுகளை மூடிக்கொள்வார். நரஹரி ரொம்ப கெட்டிக்கார பொற்கொல்லர்மிகச்சிறந்த நகைகளை தங்கத்தில் வடிப்பவர். நாணயமானவர் என்று பேர் பெற்றவர்பண்டரிபுரத்திலேயே இருந்தும் விட்டலன் கோவில் கோபுரத்தை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கழுத்தை ஒடித்து வேறு புறம் திரும்பிக் கொள்பவர். கோவிலுக்கு அருகே அவருக்கு ஏதாவது வேலை இருந்தாலும் கோவிலுக்கு பின் பக்கமாக சுற்றிக்கொண்டு தான் செல்வார்! விடியற்காலையில் பீமாரதி நதியில் குளித்துவிட்டு மல்லிகார்ஜுன சுவாமியை மனதார வழிபாட்டு 24 மணி நேரமும்  சிவ சிவ என்று உச்சரித்தக். கொண்டே தன் காரியங்களைப் பார்ப்பார்
எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் அவளை ஏறிட்டும் பார்க்காமல் ஒரு குழந்தை எப்படி தன் தாயிடம் மட்டும் செல்லுமோ அப்படியே நரஹரி மல்லிகார்ஜுனனை மட்டுமே ஏற்றுக்கொண்டு சிறந்த ஒரு சிவபக்தனாக விளங்கினார். அதற்காக அவர் பாண்டுரங்கனை தூஷித்தோ, விட்டல பக்தர்களின் மனம் புண் பட எதாவதுபேசியோ, நடந்தாரா என்றால், பாவம், அவர் மீது அபாண்டமாக ஒன்றும் சொல்ல முடியாது. அதற்கு அவருக்கு நேரம் கிடையாது. அவரை எல்லோரும் மதிக்கும்படியாகவே வாழ்ந்து வந்தார்.
பண்டரிபுரத்திற்கு ஒரு செல்வந்தர் வந்தார். அவருக்குப் பிள்ளைச் செல்வம் இல்லை. அவர் ஒரு விட்டல பக்தன். பண்டரிநாதனை வேண்டிக் கொண்டதும் அடுத்த ஆண்டே குழந்தை பிறந்தது. அவர் உடனே தன் குழந்தையை எடுத்துக்கொண்டு விட்டலன் முன் படுக்க வைத்து, “விட்டலா, உன் அருளால் தான் எனக்கு பெண் குழந்தை பிறந்ததது. உன் கருணைக்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன் என்று அவன் மனமுருகி வாய்விட்டு வேண்டிக்கொண்டிருக்கும் போது விட்டலன் சந்நிதியில் அவன் அருகில் அப்போது நின்று கொண்டிருந்த ஒரு முதிய பக்தர்,
அப்பா, நீ யார், எங்கிருக்கிறாய்?” என்று கேட்டார்
சுவாமி, நான் பக்கத்து ஊர். அரிசி பருப்பு மண்டி வியாபாரம்
நீங்களா அவர்.பெரிய செல்வந்தாராச்சே நீங்கள். விட்டலன் இடுப்பில் ஒரு தங்க ஒட்டியாணம் செய்து போடுங்களேன் .கண்ணுக்கு ஜக ஜோதியாக இருக்கும் பக்தர்கள் கண்டு மகிழ்வார்களே
ஆஹா, இது விட்டலனே என்னிடம் நேரில் வந்து கட்டளை இட்டது போல் படுகிறது. உடனே அவ்வாறே செய்கிறேன்
வீட்டில் மனைவியோடு கலந்து பேசினான் பணத்தை திரட்டினான். முடிந்த அளவு தேவையான தங்கம் வைரம், மரகதம், முத்து, கோமேதகம், பவழம் என்று நிறைய வித விதமான ஆபரண கற்களும் வாங்கினான். யார் யாரையோ விசாரித்தான் பலர்பண்டரிபுரம் நரஹரியிடம் போ. சுத்தமானவன் நாணயமாக சரச விலையில் செய்து கொடுப்பான்என்றார்கள். நரஹரி வீட்டை விசாரித்து அறிந்து கொண்டு வந்து கதவை தட்டினான் . நரஹரி சிவபூஜையில் இருந்ததால் காத்திருந்து பிறகு பேச்சு தொடர்ந்தது.
வாருங்கள், பூஜையில் இருந்ததால் பாதியில் விட்டு விட்டு வரமுடியவில்லை. யார் நீங்கள்? என்ன வேண்டும்?”
நரஹரி, நான் பக்கத்து ஊரில் வியாபாரம் செய்கிறவன். எனக்கு உங்களிடம் ஒரு காரியம் ஆக வேண்டும்?”
ஆஹா. மல்லிகார்ஜுனன் அருளால் முடிந்தால் செய்கிறேன்.”
இந்த பண்டரிபுரத்தில் விடோபாவுக்கு ஒரு தங்க ஒட்டியாணம் செய்து கொடுக்க வேண்டும்?”
முடியாதே சுவாமி. நான் ஹரி பக்தன் அல்ல. மேலும் சிவன் கோவில் அன்றி எந்த கோவிலுக்கும் நான் செல்வதில்லையே தான் வந்த விபரத்தை நடந்தவற்றை சொல்லி பண்டரிநாதனுக்கு நகைகள் செய்து தரக் கேட்டார். சுத்த சைவரான அவரோ அதை மறுத்தார்.
கேள்விப்பட்டேன். அதற்கு ஒரு வழியும் செய்து தான் வந்தேன். பாண்டுரங்கன் இடுப்பு சுற்றளவு வாங்கி வந்திருக்கிறேன். நீங்கள் செய்து கொடுத்தால் அதை எடுத்து சென்று கோவில் அளிக்கிறேன்
அப்படியென்றால் ஒரு ஆட்சேபணையுமில்லை. இன்னும் ஒரு வாரத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்
இப்படியும் ஒருவனா? பண்டரிபுரத்திலேயே இருந்தும் கூட விட்டலனை நேரில் பார்க்காமல் ஒருவனா? நமக்கென்ன? நல்லவனாக இருக்கிறான்.வேலையில் கெட்டிக்காரன் என்று சொல்கிறார்களே!”
ஒருவாரத்தில் அருமையான ஒட்டியாணம் ரெடியானது
இதை எடுத்துக்கொண்டு சென்று சரியாக இருக்கிறதா என்று போட்டு பாருங்கள். நீங்கள் கொடுத்த அளவுக்கே செய்திருக்கிறேன்  என்றான்  நரஹரி.
ரொம்ப சந்தோஷத்தோடு  நவரத்ன கற்கள் மின்னும் தங்க ஒட்டியாணத்தை எடுத்துக்கொண்டு சந்திரபாகாநதியில் குளித்துவிட்டு பூஜா சாமான்களுடன் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் கொடுத்து விட்டலனுக்கு இடுப்பில் பூட்டினான் வியாபாரி. பாதி இடுப்புக்கு கூட ஒட்டியாணம் வரவில்லை! அளவு எப்படி தப்பாக செய்தான் நரஹரி? அர்ச்சகரை மீண்டும் அளவு எடுக்க சொன்னான். அளவு சரியாகவே இருந்தது அனால் ஒட்டியாணம் இடுப்பு அளவுக்கு சுற்றி வரவில்லையே. மீண்டும் நரஹரியிடம் வந்தான் விஷயம் அறிந்த நரஹரி அவன் புதிதாக கொடுத்த அளவுக்கு ஒட்டியாணத்தை நீட்டி தந்தான். மீண்டும் விட்டலன் இடுப்பில் அணிவித்தபோது இடுப்பில்   அது பெரியதாக இருந்தது. தொள தொள வென்று நழுவியது மீண்டும் அளவெடுத்து நரஹரியிடம் வந்தது. மூன்று முறை இது போல் ஒட்டியாணம் விட்டலனுக்கும் நரஹரிக்கும் இடையே பயணம் செய்தது.   நரஹரி  துல்லியமாக  அளவெடுத்து கடுகளவு கூட பிசகில்லாமல் அளவோடு செய்பவனாயிற்றே. என்ன ஆச்சர்யம்?
நான் என்ன அபசாரம் செய்தேன்? ஏன் என்னுடைய காணிக்கையை விட்டலன் ஏற்க வில்லை?. அளவு சரியாக  இருந்தும் ஏதேனும் குறை தென்படுகிறதே.’ மனதில் விசனத்தோடு கண்களில் நீரோடு நரஹரியிடமே ஓடினான் வியாபாரி. விஷயத்தை அமைதியாக கவலையோடு கேட்டான் நரஹரி.
நீங்களே நேரில் வந்து அளவெடுத்து பூட்டினால் தான் ஒட்டியாணம் விட்டலன் மேல் ஏறும் போல் இருக்கிறது  என்று  அழாக்குறையாக  கெஞ்சினான்  வியாபாரி.
சுவாமி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. சிவன் கோவில் தவிர என் கால் எந்த கோவிலுக்கும் செல்லாது கண் எந்த தெய்வத்தையும் பார்க்காது” —   நரஹரி.
செல்வந்தர் மீண்டும் வந்து, அதை மட்டுமாவது  அளவெடுத்துச் செய்து தர வேண்டும் என்று வேண்டினார்அன்று திரயோதசி திதி, பிரதோஷ காலம் நெருங்குகிறது. `சிவ வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும். இந்த நேரம் பார்த்து இவர் வேறு தொல்லை செய்கிறாரேஎன்று தயங்கினார். எனவே, ஒரு உபாயம் சொன்னார். சிவனைத் தவிர வேறு தெய்வங்களைக் காண விரும்பாத அவர், தன் கண்ணைக் கட்டிக்கொண்டு தான் பாண்டுரங்கனின் ஆலயத்துக்குள் வருவேன் என்றும், அளவும் அப்படியே கையால் அளந்து எடுப்பேன் என்றும் சொன்னார். வேறு வழியின்றி அனைவரும் ஒப்புக்கொண்டனர்
கண்ணைக் கட்டிக் கொண்டு அழைத்து வரப்பட்ட நரஹரியை பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். அவன் லட்சியம் பண்ணவில்லை.   உள்ளே சென்றான் விட்டலன் முன்னே நிற்க வைக்கப்பட்டான். அளவு நூலை கையில் எடுத்துக் கொண்டான் விட்டலன் உருவத்தை தடவிப்பார்த்தான். இடுப்பில் மெத்து மெத்தென்று தோல்  ஸ்பரிசம்  பட்டது. நன்றாக தடவினான். துணியில்லை. தோல் தான். இடுப்பை சுற்றி தடவும்  போது நான்கு கைகள் இருப்பது உணர்ந்தான். கவனத்தோடு தடவி என்ன என்று சோதித்தான் ஒரு கையில் டமருகம் ஒரு கையில் அக்னி, ஒரு கையில் சூலம்,  இது என்ன அதிசயமாக இருக்கிறதேமீண்டும் இடையில் கை வைத்தான். நிச்சயம் இது புலித்தோல் தான். அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. “என் மல்லிகார்ஜுனனா இது.  விட்டலனிடம் அல்லவோ அழைத்துப்  போகப்பட்டேன்?”.
சந்தேகத்துக்கு கையை மேலே கொண்டு போனான் நரஹரி. கழுத்தில் ஒரு பாம்பின் உடல்  சில்லென்று  வழவழப்பாக நெளிந்து ஸ்பரிசமானது. இன்னும் மேலே கை சென்றது தலை. ஜடா முடி. அதை தடவினான். இன்னும் மேலே. இது என்ன வளைந்து பிறை சந்திரனா? இது என்ன மீண்டும் ஒரு பாம்பு.  பிறகு  ஒரு  உத்ராக்ஷ மாலை. மேலே கை தலையை சோதிக்கும்போது அவன் முகம் விட்டலன் அருகே இருந்ததல்லவா?. கம்மென்று பன்னீர் கலந்த விபூதி வாசனை மூக்கைத் துளைத்தது. நரஹரிக்கு பரிச்சயமான விஷயமாச்சே!. “ஓம் நம சிவாய என்று சொல்லக் கொண்டே கண்ணைக் கட்டியிருந்த துணியை பிடுங்கி எறிந்தான் நரஹரி. ஆவலாக நோக்கின அவன் கண் முன்னே சிரித்துக்கொண்டே இடுப்பில் கை கட்டி விட்டலன் துளசி மாலையோடு நின்றுகொண்டிருந்தான்.
சரி, நமக்குத்தான் மனப் பிரமை. பிரதோஷ கால நினைவிலேயே இருப்பதால் அப்படித் தோன்றுகிறது என்று எண்ணிக்கொண்டு மீண்டும் கண்களைக் மூடிக்கொண்டு பாண்டுரங்கனைத் தொட்டார். கை அளவெடுக்க ஆரம்பித்தது. மீண்டும்  அதே பழைய அனுபவம். கண்களை திறந்தால் விட்டலன். மூடினால் மல்லிகார்ஜுனன். உடனே அவர் கண்களுக்குள் இறைவன் சந்திரமௌலீஸ்வரராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். அதைக்கண்டதும் அவர் கண்களில் நீர் பெருகியது. இந்தப் பிரபஞ்சமே இறைவனின் வடிவாக இருக்க, பாண்டுரங்கனின்இந்த விக்கிரகத்தை நாம் அந்நியமாக எண்ணலாமா என்று கண்ணீர் மல்க இறைவனைத் தொழுதுகொண்டார். அதன் பின் அவருக்கு பாண்டுரங்கனும் பரமசிவனும் வேறு வேறு  அல்ல என்ற உண்மை புரிந்தது
ஹே, விட்டலா!, என்னை மன்னித்து விடு. என் பரமேஸ்வரனும் நீயே, என் அறியாமையில் செய்த தவறை பொருட்படுத்தாதே. திருந்தி விட்டேன்என்று நெஞ்சம் உருகினான்.  ஒட்டியாணம் அளவு கச்சிதமாக வந்தது.
மஹா பக்த விஜயத்தில் இவரது வரலாறு வருகிறது.இவர் மராட்டிய மொழியில் அபாங்க என்ற பெயரில் இறைவனைப் பற்றி எழுதிய கவிதைகள் புகழ்பெற்றவை!