விஸ்வகர்மா

விஸ்வாஸ்

2002 ஆம் ஆண்டு விஸ்வகர்மா நல அமைப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டது. VISWAKARMA WELFARE ASSOCIATION (VISWASS) சுருக்கமாக விஸ்வாஸ் என்ற பெயரோடு இந்த அமைப்பு பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருகிறது.படித்த பணியிலிருக்கும், பல்வேறு துறைகளில் பரிணமித்து சுயமாக தொழில் நடத்தி வரும் விஸ்வகர்மாக்களை ஒருங்கிணைத்து நமது சமூக மக்களுக்கு முடிந்த அளவிற்க்கு சேவை ஆற்றுவதை தனது லட்சியமாக கொண்டுள்ளது விஸ்வாஸ். (An association of educated, employed, & entrepreneurs of Vishwakarma community) படித்த பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் விஸ்வகர்மாக்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த அமைப்பு பயன்படும்.அதன் மூலம் தங்களுடைய சமூகத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பாலமாக இருக்கும். படித்து பணியிலிருக்கும் விஸ்வகர்மாக்கள் தங்களது சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வது போன்ற நிலை உள்ளது. தங்களது குழந்தைகள் திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது தான், அது உணரப்படுகிறது.கல்வி வேலை வாய்ப்பு, சுயதொழில், மகளிர் மேம்பாடு போன்றவற்றில் நமது சமூகத்தாற்க்கு உதவ இந்த அமைப்பு பாடு படுகிறது. இது அரசியல் சாராத, இலாப நோக்கற்ற, ஓரளவு சமூகத்தில் உயர்ந்த விஸ்வகர்மாக்கள் தனது சமூகத்திற்க்கு உதவ, தானே முன் வந்து உதவ அமைக்கப்பட்ட சேவை மனப்பாண்மை கொண்ட அமைப்பாகும். (Non political. Non profitable, Service oriented Organisation) இந்த அமைப்பு படித்து, சுயதொழில் மற்றும் பணி யிலிருக்கும், ஓய்வுபெற்ற, தன்னார்வ விஸ்வகர்மாக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இணையதளத்தின் மூலமாக அனைத்து தமிழக படித்த, பணியிலுள்ள, தொழில் முனைவர் விஸ்வகர்மாக்களை ஒன்றிணைப்போம். அடித்தளத்திலுள்ள நம் சமுக விஸ்வகர்மாக்களை உயர்த்தி விடுவோம்!!

அனைவரும் ஒன்றிணைந்தால்,  நினைப்பதை வென்றிடலாம்!