அது மிக உயர்ந்த வாசனைப் பொருள்கள் சேர்த்த மைத்ததாதலின் மெல்லு கையில் பரிமளம் உண்டா யிற்று. அவன், அது தனக்குக் கொடுக்கப்படும் வெறும் வெற்றிலையும் சீவலுமாக இராமல் வாசனைத் தாம்பூலமாக இருத்தலை உணர்ந்து திரும்பிக்கீழே நோக்கினான்.ரெட்டியார் மீண்டும் சிற்பி கையை நீட்டும்பொழுது கொடுப்பதற்காகத் தாம்பூலத்தை ஸித்தமாக வாங்கி வைத்துக்கொண்டு நின்றார். அவரைக்கண்ட சிற்பி திடுக்கிட்டான்; அவனுக் குண்டான வியப்பிற்கும் அச்சத்திற்கும் எல்லையே யில்லை; உடனே கீழே குதித்தான்; சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்;