

கயத்தாறில் வாழ்ந்து வந்த முத்துசாமியின் பெற்றோர், தொழில் முன்னேற்றம் குறித்து விருதுநகர் சென்றடைந்தனர், துள்ளித் திரிந்த முத்துசாமி, பள்ளிப்பருவம் எய்தியதும் பள்ளிக் கணக்குப் பயில சத்ரிய வித்யா சாலை எனும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். முத்துசாமி படித்துக்கொண்டிருந்த அந்த பள்ளியில் அவருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். முதல். வகுப்பிலிருந்தே முத்துச்சாமி அருகில் அமர்ந்திருந்த அவரும் முத்துசாமியும் ஈருடலும் ஓருயிருமாக பழகி வந்தார்கள். பிற்காலத்தில் ” விருதுநகர் இரட்டையர்” என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட. (பள்ளிப் பாடநூலான) இந்திய வரலாறு, என்னும் நூல் இதை விளக்குகிறது
விருதுநகரில் அடுத்து நடந்த காங்கிரஸ் தலைவர் வேலூர் குப்புசாமி முதலியார் கூட்டமும் திட்டமிட்ட கலவரத்தால் கலைந்தது. இரண்டாம் நாள் நிகழ்வுற்ற கூட்டத்தில் முத்துசாமி ஆச்சாரியார் பேசினார்; அவரது சொற்பொழிவைக் கேட்ட மக்கள் மகுடி. கேட்ட நாகமாயினர். கலவரம் ஏதுமின்றிக் கூட்டம் அமைதியாக நடந்தது. ” 1922 ஆம் ஆண்டில் சி. ஆர் தாஸின் சுயராஜ்ய கட்சி துவங்கிற்று சட்டசபை நுழைவை வற்புறுத்தும் அக்கட்சியை முத்துசாமியும் ஆதரித்தார். அப்போதுதான் எஸ் சீனிவாச ஐயர், ஏ ரெங்கசாமி ஐயங்கார் எஸ் சத்தியமூர்த்தி ஆகிய தலைவர்களின் தொடர்பும், நட்பும் கிட்டிற்று. சட்டசபை நுழைவு தேவை என்றார் சி.ஆர்.தாஸ் சத்தியமூர்த்தி அதனை ஏற்றார். ராஜாஜி உடனே அதனை எதிர்த்தார். 1930ல் அண்ணல் காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகத்தைத் துவங்கினார். தண்டியாத்திரை வடக்கே; வேதாரண்ய யாத்திரை தெற்கே; காந்திஜியின் தலைமை வடக்கே; ராஜாஜியின் தலைமை தெற்கே , காந்திஜி கைதானார். அவர் கைதான சில மணி நேரங்களிலேயே விருதுநகரில் அரசாங்கத்திற்கு எதிராக உப்புச் சத்தியாக்கிரகத்தைப் புகழ்ந்து பேசிய குற்றத்திற்காக தமிழகத்திலேயே முதன்முதலாகக் கைது செய்யப்பட்டார் முத்துசாமி ஆச்சாரியார்!
இந்தியத் திருநாடு விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக விடுதலைப் போராட்டத்தின் போராட்டத்தில் ஆற்றிய பங்கு பணிகளின் நினைவாக அப்போதைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தி இந்தியத் திருநாட்டின் சார்பில் தியாகி முத்துசாமி அவர்களுக்கு 15.08.1972 அன்று தாமிரப்பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார்.