தமிழ் இலக்கிய உலகில் 19ம் நூற்றாண்டு, பழமை, புதுமை இரண்டையும் இணைக்கும் பாலமாக அமைந்தது எனலாம். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில்; மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் இராமலிங்க சுவாமிகளும் அவதரித்துத் தமிழுக்குத் தொண்டாற்றினர். அவர்களைத் தொடர்ந்து, கோபாலகிருஷ்ண பாரதி தொழுவூர் வேலாயுத முதலியார் பூண்டி அரங்கநாத முதலியார் தண்டபாணி சுவாமிகள் போன்றோர் தோன்றி எண்ணற்ற பாடல்களை எழுதித் தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்த்தனர். இவர்கள் வரிசையில் தோன்றியவர்