விஸ்வாஸ் வித்யா 2019 நிகழ்ச்சியின் இணை நிகழ்வாக பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாணமண்டபத்தில்முற்றிலும் புதிதாக ரூ 25 லட்சம் சிலவில் நவீனப்படுத்தப்பட்ட உணவுக்கூடம், சமையல் அறை & உணவுக்கூடவளாக மேற்கூரைஆகியவற்றை கர்னாடக நந்தி ஆஸ்ரமம் விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்வாமி சிவாத்மானந்தசரஸ்வதி அவர்களும், பெண்ணாகரம் டாக்டர் கனகராஜ் அவர்களும் தங்களது திருக்கரங்களால் திறந்துவைத்து சிறப்பித்தார்கள்.
பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகத்தின் பெருமை மிக்க இந்த கல்யாண மண்டபம் அருள்மிகு காமாட்சி அம்மன்கோவில் ஆகியவற்றை திறம்பட நிர்வகித்துவரும் பொள்ளாச்சி விஸ்வப்ரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபனஅறக்கட்டளையின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாகும்
